Friday, November 13, 2015

நாமக்கல்லில் அருந்ததியர் +2 மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்- சமூக நீதி இயக்கம்

Published on 24 May 2015
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மணி என்பவர் மகன் டேவிட் (ஏ) பத்மநாபன் (வயது 17) 17/5/2015அன்று கிணறு தூர்வாரும் வேலைக்கு விடுமுறையில் தன் தாத்தா உடன் சென்று இருந்த பொழுது, கிணறு உரிமையாளர் காளியண்ணன், டேவிட்யை ஜாதி பெயரயை சொல்லி தாக்கி கிணற்றில் தள்ளினார்.
இதில் நீரில்லா கிணற்றில் டேவிட் விழுந்ததில் இரு கால்கள், கை, தாடை எலும்பு, பற்கள் என பல்வேறு எலும்பு முறிவு மற்றும் பலத்த ரத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். இதுவரை 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது சமந்தமாக இன்று வரை பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய காவல் துறை மறுத்துவருகிறது.
- சமூக நீதி இயக்கம்
9865295889

No comments:


View My Stats